ஏசுவின் மலையில் அவர் வீட்டில் ,
என்றுமே வாழ்வார் எவர்? சொல்லும்.
ஆசையின் வழி மேற் செல்லாரே ;
அறநெறி கெட்டோர் அண்டாரே !
பூசைகள் அவர்க்கே செய்வாரே!
பொன்னடி மறவார் மதிப்பாரே!
பொன்னடி மறவார் மதிப்பாரே!
மாசறு நெஞ்சம் உடையோரை ,
மறுத்துகை யூட்டை வாங்காரே !
பூரியார் அழிக்கும் தேவனவர்
புகழுக் கஞ்சி வாழ்பவரே!
நேரிய செயல்கள் செய்பவரே!
நெஞ்சறி உண்மை நவில்பவரே!
சீரிய செய்யார் நட்பினையே ,
சிந்தனை செய்யா நல்லவரே!
சேரிடர் எதுவாய் இருந்தாலும்
செய்தவாக் குருதி மீறிலரே!
மாறிய வாக்கோர் மதியாரே ,
மதிக்கும் அன்பர் தமக்கென்றும்
ஊறுறும் செயல்கள் செய்யாரே!
ஒழிவிடத் திகழ்ச்சி பேசாரே!
கூறுவார் வாசம் சீயோனில்
கொண்டவர் புகழே ! அவர்சொல்லை
மீறுவோர் கூட்டை எண்ணாரே!
வெஞ்சினம் நீக்கி வாழ்வாரே!
அடைக்கலம் கர்த்தர் என்பார்!
அவரையே தலைவர் என்பார்!
எடுக்கிலம் கர்த்தர் அன்றி
எவரது பெயரும் நாவில்
அடுக்கிய கோடி கண்டும்
அடிமையாம் அவர்க்கே என்பார்!
கொடுக்கிலம் இரத்தம் சிந்தும்
கொடுமையின் பலிகள் என்பார்!
ஏசுவின் மலையில் வீட்டில் இருப்பவர் இவரே காணும்!
<௦>
No comments:
Post a Comment