Tuesday, July 16, 2013

அன்பு.  .02-2012 06:44:28 PM
                  [B]

அன்பெனில் பொறாமை யில்லை! 
அன்பெனில் பெருமை யில்லை! 
அன்பெனில் இறுமாப் பில்லை! 
அன்பெனில் பேத மில்லை! 
அன்பெனில் கோப மில்லை! 
அன்பெனில் சாப மில்லை! 
அன்பெனில் ஓரம்இல்லை! 
அன்பெனில் கோரம் இல்லை! 01 

அன்பெனில் நம்ப வேண்டும்! 
அன்பெனில் சகிப்பு வேண்டும்! 
அன்பெனில் பொறுமை வேண்டும்! 
அன்பெனில் கருணை வேண்டும்! 
அன்பெனில் நேர்மை வேண்டும்! 
அன்பெனில் நியாயம் வேண்டும்! 
அன்பெனில் உண்மை வேண்டும்! 
அன்பெனில் மகிழ்ச்சி வேண்டும்! 02 

என்மொழி எதுவா னாலென்? 
என்பொருள் அன்பா கட்டும்! 
என்பலம் எதுவா னாலென்? 
என்பலன் அன்பா கட்டும்! 
என்கொடை எதுவா னாலென்? 
என்செயல் அன்பா கட்டும்! 
என்குணம் எதுவா னால்என்? 
என்மணம் அன்பா கட்டும்! 03 

< 0 >
07-02-2012 06:40:16 PM
ஒருதாரக் கணவன்..! 
உன்னை விரும்பியபின் 
உறக்கத்தை மரணத்தை 
எப்படித் தழுவுவேன் 
இன்னும் நான் 
ஒருதாரக் கணவன்..! 
====
 
ஈசல்கள் பெண்கள்..! 
கலியாண மழையில் பிறந்து 
வரதட்சணைக் 
கனலில் மடியும் 
மலிவான ஈசல்கள்..! 
==========
 
சாந்தி உறங்குமிடம்..! 
வன்முறை பெருகி வளருது நாட்டில்! 
புதிய சக்திகள்! புதுப்புது உத்திகள்! 
நிதம்நிதம் தேவை நெருக்கடி நிலைமை! 
இதந்தரும் செய்தியோ இன்றும் 
காந்தி சமாதியில் சாந்தி உறங்குது! 
=========
 

குழலின் முயற்சி.. 
ஊதியது ஒருவாய் 
அடைத்த்தோ நான்கு விரல்கள் 
இருப்பினும் 
நாதமாய் நான்..! 
< 0 >
 

கோடை வானம்..! 
குலுக்கல் அழகிகளும் 
குத்துவெட்டுச் சண்டைகளும் 
விலக்கி வெளிவந்த 
வெள்ளித் திரைப்படம்போல் 
விளங்கும் ஒரு வானம்..! 
<
>
                     06-02-2012 08:16:22 PM(B)

வெட்டிப் பேச்சு வீணருக் குள்ளே 
வீரம் இல்லை வெறுமையடி! 
தட்டிக் கேட்கும் கைகள் உள்ளே 
தாய்மை காட்டும், தடங்களடி! 
விட்டுக் கொடுக்கும் மனத்துக் குள்ளே 
வீரம் இருந்து வலிமறைக்கும்! 
தொட்டுப் பார்க்க அதனுள் தானே 
தூங்கும் அகிம்சைப் புலிதெரியும்! 
<
>
      03-02-2012 06:27:29 PM
நாலாறு மாதமெனை 
நலுங்காமல் குலுங்காமல் 
நடுவயிற்றுள் பேணியபின் 
நானிலத்திற் பெற்றாளை 
நூலேறப் பொறுக்காத 
நுண்ணிடையின் முன்,எனை,முந் 
நூறுநாட் சுமந்திருந்து 
நொந்தவளாய் ஈன்றாளை 
மாலேறும் பெருவத்தில் 
மழலையெனை மிகவிரும்பி 
மகிழ்ந்து,அதனை நீத்தாளை 
மனத்திலெனை நிறைத்தாளைச் 
சேலேறும் தடங்கண்ணாம் 
சிறுகோட்டை தனிலென்னைச் 
சிறைவைத்துத் தனைமறந்தாள் 
சேர்ந்திருப்ப தெந்நாளோ? (1 ) 

என்னோடு தான்தூங்கி 
என்விழிக்குள் உறவாடி 
இன்பமென, இளவலென, 
எப்பொருட்கும் முன்,நாடிப் 
பொன்னோடு பல்துகிலும் 
பூட்டியெனை அழகூட்டிப் 
பொங்குமனம் ஆனந்தப் 
புனல்கூட்டப் பாராட்டித் 
தன்னோடு வந்தபொருள் 
தன்னுயிரின் தனிச்சொத்து, 
தரணியிதில் தாய்மைதனைத் 
தந்தபெரும் வள்ளலென 
முன்னோடப் பின்வந்து 
முழுதுனெனுள் தனைமறந்து 
முத்தமழை பெய்தாளை 
முகம்பார்ப்பது எந்நாளோ? (2 ) 
       †