வெட்டிப் பேச்சு வீணருக்
குள்ளே
வீரம் இல்லை வெறுமையடி!
தட்டிக் கேட்கும் கைகள் உள்ளே
தாய்மை காட்டும், தடங்களடி!
விட்டுக் கொடுக்கும் மனத்துக்
குள்ளே
வீரம் இருந்து வலிமறைக்கும்!
தொட்டுப் பார்க்க அதனுள்
தானே
தூங்கும் அகிம்சைப் புலிமுறைக்கும் !
தூங்கும் போது காண்பது
கனவா?
தூக்க மின்றிக் காண்பது
கனவு!
ஏங்கு கின்ற ஏக்கமா
கனவு?
ஏற்ற செயலை முடிப்பது கனவு!