தரிசு நிலத்தை உழுதுழுதே
தவிக்கும் ஏழை விவசாயி!
பரிசுப் பொருள்கள் பாராதே
பாடிக் களிக்கும் பாட்டாளீ!
முரசுக் கைகள் கேளாதே
மூடி சுமக்கும் எழுத்தாணி!
சிரசில் நிற்க முடியாமல்
சிந்தி வீழும் ஒருதூசி!
தரிச னங்கள் கிட்டாதே
தரைமேல் ஆடும் பூசாரி!
கரிச னங்கள் இல்லார்க்கும்
கைப்பூண் மாட்டும் ஆசாரி!
அரச ராகக் கவியோச்சும்
அனைவ ருக்கும் அனுசாரி!
பரிச லாலே தமிழ்க்கடலைப்
பாடிக் கடக்கும் ஒருகாரி!
No comments:
Post a Comment