Tuesday, January 24, 2012

தூங்கும் புலி..!


வெட்டிப் பேச்சு வீணருக் குள்ளே
    வீரம் இல்லை வெறுமையடி!
தட்டிக் கேட்கும் கைகள் உள்ளே
    தாய்மை காட்டும், தடங்களடி!
விட்டுக் கொடுக்கும் மனத்துக் குள்ளே
    வீரம் இருந்து வலிமறைக்கும்!
தொட்டுப் பார்க்க அதனுள் தானே
    தூங்கும் அகிம்சைப் புலிமுறைக்கும் !

தூங்கும் போது காண்பது கனவா?
    தூக்க மின்றிக் காண்பது கனவு!
ஏங்கு கின்ற ஏக்கமா கனவு?
    ஏற்ற செயலை முடிப்பது கனவு!
           


No comments:

Post a Comment