07-02-2012 06:40:16 PM
ஒருதாரக் கணவன்..! உன்னை விரும்பியபின்
உறக்கத்தை மரணத்தை
எப்படித் தழுவுவேன்
இன்னும் நான்
ஒருதாரக் கணவன்..!
====
ஈசல்கள் பெண்கள்..!
கலியாண மழையில் பிறந்து
வரதட்சணைக்
கனலில் மடியும்
மலிவான ஈசல்கள்..!
==========
சாந்தி உறங்குமிடம்..!
வன்முறை பெருகி வளருது நாட்டில்!
புதிய சக்திகள்! புதுப்புது உத்திகள்!
நிதம்நிதம் தேவை நெருக்கடி நிலைமை!
இதந்தரும் செய்தியோ இன்றும்
காந்தி சமாதியில் சாந்தி உறங்குது!
=========
குழலின் முயற்சி..
ஊதியது ஒருவாய்
அடைத்த்தோ நான்கு விரல்கள்
இருப்பினும்
நாதமாய் நான்..!
< 0 >
கோடை வானம்..!
குலுக்கல் அழகிகளும்
குத்துவெட்டுச் சண்டைகளும்
விலக்கி வெளிவந்த
வெள்ளித் திரைப்படம்போல்
விளங்கும் ஒரு வானம்..!
< ௦ >
No comments:
Post a Comment