Tuesday, July 16, 2013

07-02-2012 06:40:16 PM
ஒருதாரக் கணவன்..! 
உன்னை விரும்பியபின் 
உறக்கத்தை மரணத்தை 
எப்படித் தழுவுவேன் 
இன்னும் நான் 
ஒருதாரக் கணவன்..! 
====
 
ஈசல்கள் பெண்கள்..! 
கலியாண மழையில் பிறந்து 
வரதட்சணைக் 
கனலில் மடியும் 
மலிவான ஈசல்கள்..! 
==========
 
சாந்தி உறங்குமிடம்..! 
வன்முறை பெருகி வளருது நாட்டில்! 
புதிய சக்திகள்! புதுப்புது உத்திகள்! 
நிதம்நிதம் தேவை நெருக்கடி நிலைமை! 
இதந்தரும் செய்தியோ இன்றும் 
காந்தி சமாதியில் சாந்தி உறங்குது! 
=========
 

குழலின் முயற்சி.. 
ஊதியது ஒருவாய் 
அடைத்த்தோ நான்கு விரல்கள் 
இருப்பினும் 
நாதமாய் நான்..! 
< 0 >
 

கோடை வானம்..! 
குலுக்கல் அழகிகளும் 
குத்துவெட்டுச் சண்டைகளும் 
விலக்கி வெளிவந்த 
வெள்ளித் திரைப்படம்போல் 
விளங்கும் ஒரு வானம்..! 
<
>

No comments:

Post a Comment