Thursday, November 10, 2011

03/’89 குழந்தைக் கவிஞர் நினைவில்..


பாவாணர் வானத்துப் பிள்ளைநிலா கண்தூங்கிப்
போவானேன்? எம்மைப் பிரிவானேன்?-கூவியழும்
பிள்ளைக் குரல்களுக்குத் தாலாட்டாய்ப் பாடியவாய்
கொள்ளை யடித்ததார் கொல்!                                                                        01


பிஞ்சுக் கரங்களுடன் பேனா உறவாடக்
கொஞ்சும் மொழிகளிலே கொள்கைநலம் – விஞ்ச
உரைத்தார் இவரினும் உண்டோ? தமிழும்
நரைத்தே அறிந்திலன் நான்!                                                                         02


சொல்லெளிதாம் தண்டமிழில் சோர்வின்றித் தான்கண்ட
நல்லன,எல் லாமே நவின்றார்;அச் – செல்வமதை
வானோர் குழந்தைகட்கும் வாரிக் கொடுத்திடவோ
தானேறிப் போனாரவ் வான்!                                                                          03


                                                      < 0 >

No comments:

Post a Comment