Friday, December 23, 2011

முன்னிலும் புதிய ஆண்டு தாரும்..!

காலங்கள் தோறும் கனமழை வந்து
          களிப்புக் கூட வேண்டும்               -இறைவா
          கனிவு சேர்க்க வேண்டும்.
ஓலங்கள் மறி ஒற்றுமை தேறி
          உதவி வாழ வேண்டும்                  -இறைவா
          உந்தன் ஆசி வேண்டும்!

ஒப்பனை இல்லா உணர்வுகள் ஒன்றி
          உயிர்கள் களிக்க வேண்டும்       -இறைவா
          உலகு செழிக்க வேண்டும்!
சொப்பன மில்லா  சுவர்க்கமும் இங்கே
          சுயத்தில் தொடங்க வேண்டும்  -இறைவா
          சுற்றிப் பெருக வேண்டும்!

நாடி ஓடியே நல்ல செல்வமே
           நாளும் சேர்க்க வேண்டும்          -இறைவா
           நலிவு போக்க வேண்டும்!
பாடி ஆடியே பரமன் உன்முனே
           படையல் போட வேண்டும்!       -இறைவா
           பகிர்ந்து உண்ண வேண்டும்!

தன்னை உணார்ந்து தவறுகள் போக்கத்
           தயவு செய்ய வேண்டும்!               -இறைவா
           தடைகள் நீக்க வேண்டும்!
முன்னிலும் புதிய ஆண்டினை எங்கள்
            முன்பு கூட்ட வேண்டும்!               -இறைவா
            முழுமை யூட்ட வேண்டும்!

                                        <0>

No comments:

Post a Comment