கட்டை மீறிக் கனியை உண்ணக்
கண்டனம் செய்தார் என்றாலும்
கட்டிக் கொள்ள உடையைத் தந்து
கருணை செய்தவர் கர்த்தரே!
வெட்டிக் கொன்றான் ‘கேயீன்’ தன்னை,
வெளியில் அலைய விடுமுன்னர்;
பொட்டில் குறியைப் போட்டுத் தந்தே
பாது காத்தவர் கர்த்தரே!
ஏனிம் மனிதரைப் படைத்தோம் என்றே
எண்ணி நீரால் உலகழிக்கத்
தானே நினைத்தும் ‘நோவா’ மூலம்
தந்தார் தோணி கர்த்தரே!
வானை நிலனைப் பாலவாம் உயிரை
வஞ்சித்து அழிக்கும் மானிடரைத்
தானே மீண்டும் தட்டிக் கேட்கத்
தரணியில் வருவார் கர்த்தரே!
<0>
கண்டனம் செய்தார் என்றாலும்
கட்டிக் கொள்ள உடையைத் தந்து
கருணை செய்தவர் கர்த்தரே!
வெட்டிக் கொன்றான் ‘கேயீன்’ தன்னை,
வெளியில் அலைய விடுமுன்னர்;
பொட்டில் குறியைப் போட்டுத் தந்தே
பாது காத்தவர் கர்த்தரே!
ஏனிம் மனிதரைப் படைத்தோம் என்றே
எண்ணி நீரால் உலகழிக்கத்
தானே நினைத்தும் ‘நோவா’ மூலம்
தந்தார் தோணி கர்த்தரே!
வானை நிலனைப் பாலவாம் உயிரை
வஞ்சித்து அழிக்கும் மானிடரைத்
தானே மீண்டும் தட்டிக் கேட்கத்
தரணியில் வருவார் கர்த்தரே!
<0>
No comments:
Post a Comment