Tuesday, December 6, 2011

உழைப்பின் உயர்வு: (குறள் பாக்கள்)



01.   உண்டால் அம்ம! உலகம், உழைப்பவர்
        கொண்டாடு மட்டும் குறித்து!                                                                  

02.  ஆளும் அரசுக்கும் ஆணி உழைப்பவர்;
       வீழும் அவரின்றி வேந்து!                                                                                

03.   சூழும் நலங்களே சொல்லாவோ? வாழும்
        உழைப்பே உயர்வுக் கழைப்பு!                                                                       

04.   அம்ம! அரிவை முயக்கினும் நன்றுகொல்!
        தம்மை உயர்த்தும் உழைப்பு!                                               

05.   பாடுற்றார் உண்டு பலரே; உழைப்பினால்
        கேடுற்றர் உண்டோ?சொல் கேட்டு!                                          

06.   அன்பும் அறமும் அமைந்தோர்க்கே நல்லுழைப்பின்
        இன்பும் பயனும் இயல்பு!                                                   

07.   உழைப்பெனும் ஊட்டினால் 1ஓரைந்தும் காப்பான்
        அழைப்பிலா வானோர் விருந்து !                                           

08.   உழைப்பே உயர்வுக் கழைப்பாம்! உணர்ந்து
        களிப்போம் களைப்பைக் களைந்து!                                          

09.   கோளில் உழைப்பைக் கொடுப்பவர் தாளினை
        நாளும் வணங்குவோம் நாம்!                                                

      [1. தான், தன்குடும்பம், தன்தொழிலகம், சமூகம், நாடு -என்ற ஐந்து]

No comments:

Post a Comment