Friday, November 23, 2012

குறுகுறுப்பாக்கள்-17


எழுதிச் செல்லும்           
விதியின்கை 
எழுதி எழுதி 
மேற்செல்லும்.. 
அழுதாலும், தொழுதாலும் 
உங்களுக்கு ஒன்றும் 
கிடைக்காது.. 
அதுதான் அரசியல் சட்டம்..! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

கழனி திருத்தி 
கதிர்கள் அறுத்து 
கழிந்த சுள்ளிகளால் 
அடுப்பை எரித்து 
அதில் உணவு செய்தோம்! 

சுள்ளிகள் மறைந்தன.. 
கலப்பையை எரித்துக் 
கஞ்சி உண்டோம் .. 
இன்று 

கைகளை எரிக்கின்றோம் 
எங்கள் அரசியல்வாதிகள் 
குளிர்காய்வதற்காக..! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

மீட்கப்பட்ட மக்களுக்காக 
வீடுகள் கட்டினோம் 
'
ரோடுகள்' போட்டோம்! 
இப்பொழுது 

மீட்கமுடியாத ஊழலில் 
அரசியல் செய்துகொண்டுள்ளோம்..! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
எழும்பிக் கொண்டிருக்கின்றோம் 
எங்கோ ஒரு கிரகத்தில் 
எங்களுக்கென வீடு கட்ட.. 
உதிர்ந்துகொண்டிருக்கும் 
சிறகுகளைப் 
பூக்களாக எண்ணிக்கொண்டு.. 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!351!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment