எழுதிச் செல்லும்
விதியின்கை
எழுதி எழுதி
மேற்செல்லும்..
அழுதாலும், தொழுதாலும்
உங்களுக்கு ஒன்றும்
கிடைக்காது..
அதுதான் அரசியல் சட்டம்..!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கழனி திருத்தி
கதிர்கள் அறுத்து
கழிந்த சுள்ளிகளால்
அடுப்பை எரித்து
அதில் உணவு செய்தோம்!
சுள்ளிகள் மறைந்தன..
கலப்பையை எரித்துக்
கஞ்சி உண்டோம் ..
இன்று
கைகளை எரிக்கின்றோம்
எங்கள் அரசியல்வாதிகள்
குளிர்காய்வதற்காக..!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மீட்கப்பட்ட மக்களுக்காக
வீடுகள் கட்டினோம்
'ரோடுகள்' போட்டோம்!
இப்பொழுது
மீட்கமுடியாத ஊழலில்
அரசியல் செய்துகொண்டுள்ளோம்..!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எழும்பிக் கொண்டிருக்கின்றோம்
எங்கோ ஒரு கிரகத்தில்
எங்களுக்கென வீடு கட்ட..
உதிர்ந்துகொண்டிருக்கும்
சிறகுகளைப்
பூக்களாக எண்ணிக்கொண்டு..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!351!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விதியின்கை
எழுதி எழுதி
மேற்செல்லும்..
அழுதாலும், தொழுதாலும்
உங்களுக்கு ஒன்றும்
கிடைக்காது..
அதுதான் அரசியல் சட்டம்..!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கழனி திருத்தி
கதிர்கள் அறுத்து
கழிந்த சுள்ளிகளால்
அடுப்பை எரித்து
அதில் உணவு செய்தோம்!
சுள்ளிகள் மறைந்தன..
கலப்பையை எரித்துக்
கஞ்சி உண்டோம் ..
இன்று
கைகளை எரிக்கின்றோம்
எங்கள் அரசியல்வாதிகள்
குளிர்காய்வதற்காக..!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மீட்கப்பட்ட மக்களுக்காக
வீடுகள் கட்டினோம்
'ரோடுகள்' போட்டோம்!
இப்பொழுது
மீட்கமுடியாத ஊழலில்
அரசியல் செய்துகொண்டுள்ளோம்..!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எழும்பிக் கொண்டிருக்கின்றோம்
எங்கோ ஒரு கிரகத்தில்
எங்களுக்கென வீடு கட்ட..
உதிர்ந்துகொண்டிருக்கும்
சிறகுகளைப்
பூக்களாக எண்ணிக்கொண்டு..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!351!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment