Friday, November 23, 2012

கவலையை விடுங்க!


எழுந்தவுடன் கேட்கவேண்டும் 
செய்திகள் 
இன்று என்ன கொடுக்கிறார்கள் எங்கு 
இலவசமாய் 
என்றறிய.. 

கால்கடுக்க நின்று வாங்கியதைக் 
காசாக்க வேண்டும் மீண்டும்.. 
களைப்பினைப் போக்க 
மருந்து வாங்க வேண்டும் 
'
சீசா'க்களில் ..! 
உற்சாகத்தைப் பருகி 
உறங்கிட வேண்டும் எங்காவது.. 

மனைவி மக்களைப் பற்றி 
யோசிக்கச் சொல்கிறீர்களா.. 
மாற்றுத் திட்டங்கள் 
அதற்கு அரசு வைத்திருக்கும்.. 
கவலையை விடுங்கண்ணே ! 
பின் எதற்காக ஜனநாயகம்.. 
எதற்காக ஓட்டு....! 
!!!!!!!!!!!!!!!!!!!! 353 !!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment