Friday, November 23, 2012

குறுகுறுப் பாக்கள் -18


எத்தனையோ பட்டங்கள் 
வாலறுந்து போய்விட்டன.. 
இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான் 
என்மகன்.. 
மற்றுமொரு பட்டம் வாங்க.. 
தடுக்கமுடியாமல் 
நான் நடந்துகொண்டிருக்கின்றேன்.. 
வாக்குச் சாவடி நோக்கி.. 
!!!!!!!!!!!!!!!!!!!xxx !!!!!!!!!!!!!!!!!!!!!!
 

தராத மாநிலத்தோடு 
எதற்கு வீண் சண்டை.. 
தங்கியுள்ள குட்டைகளில் 
தண்ணீர்த் தாவரங்கள் வளர்ப்போம்.. 
தண்டிலிருந்து நீரேடுக்கலாம்.. 
தழைகளை உண்டு 
பசியாறலாம்.. 
!!!!!!!!!!!!!! xxx !!!!!!!!!!!!!!!!!!!!!!
 

உடைந்த கண்ணாடியில் 
முகம் பார்க்காதே! 
வீட்டுக்கு ஆகாது! 
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள் 
மகளிடம்.. 
உடைந்துகொண்டிருக்கும் 
ஜனநாயகத்தால் 
நாட்டுக்காகுமோ ... 
கவிதைக்குப் 
பொருள்தேடிக் கொண்டிருப்பேன் நான் ! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!352!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment