வெய்யோனொளி, குருசேறினன் விரிகைகளில் மறைய,
மெய்யேஇவர் மகனேஒரு தேவர்க்கெனச் சிலரும்,
அய்யோஇது தகுமோதுயர் அடுமோஎனச் சிலரும்,
மெய்சோர்ந்தனர்! மிடிசேர்ந்தனர்! மிகவேதனில் அழிந்தே!
விரிந்தன கைகள், எங்கள்
விலங்குகள் உடைய என்று;
சரிந்தது தலையும் உந்தன்
சனமெமைக் கண்டு கொள்ள;
சொரிந்தது குருதி, நாங்கள்
சுனையதில் மூழ்கி மீள;
மரித்ததும் உடலே! எம்மை
மறுபடி எழுப்பிக் காட்ட!
நீள்வரை குலுங்கிற்று அன்று,
நின்னுளெம் சுமைகள் கண்டு!
கோள்களும் மறைந்த உம்மேல்
கொடுமைகள் இழைக்கப் பார்த்து!
தாழ்திரை மேல்கீ ழாகத்
தன்னுளே கிழிந்தது அன்று!
வாழ்,வரை யில்லா வாழ்வு
வந்தது,எம் மீட்சி கொண்டு!
< † >
No comments:
Post a Comment