Friday, November 18, 2011

வரையில்லா வாழ்வு வந்தது, எம் மீட்சி கொண்டு!


வெய்யோனொளி, குருசேறினன் விரிகைகளில் மறைய,

மெய்யேஇவர் மகனேஒரு தேவர்க்கெனச் சிலரும்,

அய்யோஇது தகுமோதுயர் அடுமோஎனச் சிலரும்,

மெய்சோர்ந்தனர்! மிடிசேர்ந்தனர்! மிகவேதனில் அழிந்தே!


விரிந்தன கைகள், எங்கள்

     விலங்குகள் உடைய என்று;

சரிந்தது தலையும் உந்தன்

     சனமெமைக் கண்டு கொள்ள;

சொரிந்தது குருதி, நாங்கள்

     சுனையதில் மூழ்கி மீள;

மரித்ததும் உடலே! எம்மை

     மறுபடி எழுப்பிக் காட்ட!


நீள்வரை குலுங்கிற்று அன்று,

     நின்னுளெம் சுமைகள் கண்டு!

கோள்களும் மறைந்த உம்மேல்

     கொடுமைகள் இழைக்கப் பார்த்து!

தாழ்திரை மேல்கீ ழாகத்

     தன்னுளே கிழிந்தது அன்று!

வாழ்,வரை யில்லா வாழ்வு

      வந்தது,எம் மீட்சி கொண்டு!

                              < † >

No comments:

Post a Comment