கற்றவர் களிக்கும் சோதி!
கயவரே கலங்கும் நீதி!
உற்றவர்க்கு உதவும் ஆதி!
உணர்ந்தவர்க்கு உயிரின் பாதி!
குற்றமே உணர்ந்து, நெஞ்சம்
குழைந்துவந் தோர்க்கு வாதி!
அற்றமே காத்துத் தன்னோடு
அணைத்திட வரும்,நம் நாதி!
பற்றினுக்கு உரிய சாதி!
பகைமையை அழிக்கும் தாதி!
முற்றிலும் மன்னிக் கின்ற
முரண்தொடை கூட்டும் வீதி!
சொற்றிறம் என,இ ருந்து
சுந்தர மனித னாகி
நற்றிறம் வாழ்ந்து காட்டி
நமையெலாம் காக்கும் வேதி!
அய்யனை உணர்ந்து பாடு!
அருந்தவ வாழ்வு நாடு!
மெய்யென வருவோர் கூடு!
மேதினம் அதுவென்று ஆடு!
கைவரும் நலங்கள் சேரு!
கவலைகள் விட்டு வாழு!
செய்யரும் செயல்கள் தேரு!
சேர்ந்துவாழ்ந்து உயர்ந்து மீளு!
†
No comments:
Post a Comment