Monday, October 24, 2011

குறிந்தொகையில் பெருந்தகை..!

நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்ததே!
நீரினும் ஆழமாய் நிலைத்ததே! சாரல்
கருங்கோல்ச் சிலுவை மரித்தப்
பெருங்குணத் தேசு பெருமான் அன்பே!

நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!
சாமம் வந்துகண் சாய்த்திடும் போதும்
தீமைகள் ஏற்றுச் சிலுவையைக்
காமுற் றணைந்த காதலர் நினைப்பே!


கண்டிலம் யாமே! கேட்டிலம் முன்பே!
ஒன்று தெளிய உரைக்கப் போமே:
விண்ணர சானவர் வெறுந்தரை யுற்றுப்
பொன்னுடல் கடாஅப் பெறீஇ
மன்பதை உய்ய மரித்ததும் மெய்யே!


நல்லோன் வீடு நமக்கும் கிட்டுமோ?
இல்லையோ? என்ற ஏக்கம் தவிர்நீ!
கன்மலைச் சிலுவை நாயகன் முன்னரே
பல்வகைத் துன்பம் பட்டதும்
நல்லோர்க் கன்றி நம்போன் றோர்க்குமே!

                                                    †


No comments:

Post a Comment