பஞ்சமும் நோயும் பாரினில் ஏனோ?
பகைமையும் போரும் பரமனுக் கழகோ?
தஞ்சமென் றடைந்தோர் கைவிடுத் தாயோ?
தந்தைபோல் நீயும் தயவிழந் தாயோ?
அஞ்சலென் றெழவே அகம்,மறுத் தாயோ?
அய்யகோ! உன்னுள் அறம்,ஒழித் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை விட்டிடப் போமோ?
வேறுனக் கென்னே தாகமும் உண்டோ?
என்றுதான் தணியுமோ இயேசுவின் தாகம்!
என்றுதான் தணியுமோ இக,சுக மோகம்!
என்றெம தாசையின் விலங்குடை படுமோ?
என்றெம திச்சைகள் தீர்ந்துபொய் யாமோ?
அன்றொரு புத்துலகு ஆகவந் தோனே!
அமைதியின் வாழ்வை ஆதரிப் பவனே!
வென்றுயாம் உய்வதும் உன்னருள் அன்றோ!
வேதனை இன்னும் தொடர்வதும் நன்றோ?
†
பகைமையும் போரும் பரமனுக் கழகோ?
தஞ்சமென் றடைந்தோர் கைவிடுத் தாயோ?
தந்தைபோல் நீயும் தயவிழந் தாயோ?
அஞ்சலென் றெழவே அகம்,மறுத் தாயோ?
அய்யகோ! உன்னுள் அறம்,ஒழித் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை விட்டிடப் போமோ?
வேறுனக் கென்னே தாகமும் உண்டோ?
என்றுதான் தணியுமோ இயேசுவின் தாகம்!
என்றுதான் தணியுமோ இக,சுக மோகம்!
என்றெம தாசையின் விலங்குடை படுமோ?
என்றெம திச்சைகள் தீர்ந்துபொய் யாமோ?
அன்றொரு புத்துலகு ஆகவந் தோனே!
அமைதியின் வாழ்வை ஆதரிப் பவனே!
வென்றுயாம் உய்வதும் உன்னருள் அன்றோ!
வேதனை இன்னும் தொடர்வதும் நன்றோ?
†
No comments:
Post a Comment