Monday, October 24, 2011

அவருக்கே இயேசென்று பேர்!


   (அவளுக்கும் தமிழென்று பேர் என்ற மெட்டில் எழுதியது)


அவருக்கே இயேசென்று பேர் –இங்கே
அவரினும் சிறந்த இறையில்லை தேர்!
அவர்முன்பு தூசென்று சேர்! –உன்னை
அவர்க்களி! அதன்பின் மாசில்லை பார்!

மரியாளின் மகனானது ஏன்? –வானின்
மகத்துவம் விட்டவர் பிறந்ததும் ஏன்?
தெரியாமல் இருப்பதும் ஏன்? –உன்னுள்
தெளிவின்றி வேறு,இறை தேடுதன் வீண்!    (அவருக்கே..)

தாவீதின் வம்சத்தைப் பார்! -நம்மைத்
தாங்கிட அதில்வந்த இரட்சகர் ஆர்?
மாவீடும் உனக்களிப் பார்! –என்றும்
மரணமில் லா,ஒரு வாழ்வளிப் பார்!

யூதரின் சிங்கமிங் கார்? –அந்த
யூசுப்பின் பிள்ளையாய்ப் பிறந்தவர் ஆர்?
வேதரில் வேதரிங் கார்? –மனிதர்
வினைவிட் டெழ,என உயிர்விட்ட தார்?      (அவருக்கே)

மனிதரில் ஒளிகாட்டினார் – அவர்
மனம்மாறிப் பரமேர வழிகாட்டினார்!
கனிதர மரமேறினார்! –சிலுவை
காய்த்தது, கனியதில் வரக்காட்டினார்! (அவருக்கே)

தினமிவர் பதம்பணிவாய்! –பகைத்
திறமழிப் பாய்மனந் தெளிவுறுவாய்!
மனதினில் அமைதிகொள் வாய்! –உனை
மறக்கமாட் டாரைநீ கண்டுணர்வாய்!
                                          †

No comments:

Post a Comment