Monday, October 24, 2011

(Oct. ’09) தள்ளப்படுபவர் நாமிலை..!


மெள்ளத் தமிழினிச் சாகவோ?
    மேல்நிலை பெறவழி யாகுமே!
உள்ளத் தினில்பயம் நீக்கிடு!
    ஊமைக் கனவுகள் போக்கிடு!
தெள்ளத் தெளியநற் சொற்களில்
   தேனெனுங் கவிதைகள் பாடிடு!
உள்ளக் கவலைகள் ஒட்டிடு!
   ஓடி வருகுதோர் கூட்டமே!


மெள்ளக் கிறித்துவ இலக்கியம்
    மிகவும் பலரால் படித்துளம்
கொள்ளப் போகிற நாட்களும்
    கூடி விரைவினில் வந்திடும்!
துள்ளச் செய்திடும் கவிதைகள்,
   துடித்தே எழவரும் உரைநடை,
அள்ளிக் கொண்டுடன் போகவே
   ஆவல் மிகுபலர் வருகிறார்!

எள்ளப் படுபவர் நாமிலை!
    எழுதப் படுபவர் நாமலோ!
தள்ளப் படுபவர் நாமிலை!
   தழுவப் படுபவர் நாமலோ!
கிள்ளப் படுபவர் நாமெனின்
   கிளர்ந்தே எழுபவர் நாமலோ!
வெள்ளப் பெருக்கென வாருமே!
   வேதன் துணைநமக் குண்டுமே!

                                    †






No comments:

Post a Comment