வில்லணைந்து வேல ணைந்து
வீரவாள் தாம ணைந்து
மல்லணைந்து பூமி பற்றும்
மதியணைந்த மனித னே!கேள்!
புல்லணைந்து போகும் போது
புவியினுக் கரசர் ஏசு
புல்லணைமேல் பிறந்தன் பாலே
புவியணைத்தது உன்னுள் எண்ணு!
கல்லெடுத்து நீரெ டுத்து
கானகத்து மரமெ டுத்து
‘வில்’லெடுத்த மாளி கைகள்
வெவ்வேறாம் இடமெ டுத்துப்
புல்லெடுத்த பூமிக் குள்ளே
போனவர்கள் மத்தி வந்து
புல்லுடுத்த தொழுப்பி றந்து
புவியெடுத்த பிரானை எண்ணு!
No comments:
Post a Comment