கர்த்தரை நம்பு; கைவிட மாட்டார்!
கர்த்தரால் கூடும் களி,சமா தானம்!
விசுவா சிப்பாய்! உமைநே சிப்பார்!
விரும்பி அழைப்பாய்! நெருங்கி வருவார்!
கவிதை படித்தேன்! செவியவர் கொடுத்தார்!
புவியின் நெருக்கம் புழுக்கம் தடுத்தார்!
அவரின் மகிமை அறியச் செய்தார்!
உலகின் பொய்யை உதற வைத்தார்!
பத்தியில் அழைக்கச் சித்தமும் கொடுப்பார்!
கோபம் நீக்கிக் குணமும் தருவார்!
ஆபத்து எதுவும் அணுகா வண்ணம்
கோபம் போக்கிக் குளிர்ந்த கண்ணால்
நோக்குவார் நம்மை; நீக்குவார் வாதைகள்!
ஆக்கினை விடுப்பார்! அன்பொடும் கைகளில்
தூக்குவார்! கேள்விகள் தொடுத்தவர் அடைந்த
களிப்பை மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகம்
அளிப்பார்! அணைப்பார்! அமைதியைத் தருவார்!
நிம்மதி, சுகத்தொடு நீள்சமா தானம்
நம்மொடு தங்கும்; நாமும் உறக்கம்
செய்வோம்! இனியவர் சித்தமே
மெய்வழி ! வேறோர் உய்வழி இலையே!
No comments:
Post a Comment