தன்னலம் வாழ்வு! பேசித்
தருக்கலே தொழிலாம்! சூழ்ச்சிப்
பின்னலே உள்ளம்! பேணும்
பெட்டியே தெய்வம்! வாழ்க்கை
நன்னெறி மடமை! நாவில்
மறைபொருள் திறமை! என்ற
இந்நிலை கொண்டு வாழும்
இவனொரு மனிதன் ஆமோ? 01
சுகமெனில் வரவு; சூழும்
துயரெனில் செலவு! வெற்றி
இகமதில் தானே வாழ்தல்!
இகழ்ச்சிகள் காற்றில்! நிற்கும்
புகழொடும் இகல்! அப் பாதை
போவதோ நட்டம்! என்றிச்
செகமெலாம் மாறு மானால்
சேருமோ இன்பம் தானே?! 02
[ இகல் –பகை; போர் ]
தனக்கென மரந்தான் வாழும்!
தன்னினம் மிருகம் கொல்லும்!
இனப்பற்று அவைகட் கில்லை!
இருப்பதோ அறிவில் ஐந்து!
மனப்பொருள் அவைகட் கேது?
மனிதனுக் கதுவொன் றுண்டே!
நினைத்ததும் ‘அவைகள்’ செய்யும்!
நிறுத்தபின் செய்வார் ‘மக்கள்’!
பகுத்தறிவு என்றொண் றுண்டு!
படைப்பினில் உயர்ந்தது அஃதே!
வகுத்தறி செயல்கள் உண்டு!
வாழ்க்கையின் பயனைக் கண்டு
தொகுத்தவர் மூடர் ஆமோ?
துணிந்திடு! அவரே தெய்வம்!
மிகுத்த,இவ் வறிவால் என்னாம்,
†
தருக்கலே தொழிலாம்! சூழ்ச்சிப்
பின்னலே உள்ளம்! பேணும்
பெட்டியே தெய்வம்! வாழ்க்கை
நன்னெறி மடமை! நாவில்
மறைபொருள் திறமை! என்ற
இந்நிலை கொண்டு வாழும்
இவனொரு மனிதன் ஆமோ? 01
சுகமெனில் வரவு; சூழும்
துயரெனில் செலவு! வெற்றி
இகமதில் தானே வாழ்தல்!
இகழ்ச்சிகள் காற்றில்! நிற்கும்
புகழொடும் இகல்! அப் பாதை
போவதோ நட்டம்! என்றிச்
செகமெலாம் மாறு மானால்
சேருமோ இன்பம் தானே?! 02
[ இகல் –பகை; போர் ]
தனக்கென மரந்தான் வாழும்!
தன்னினம் மிருகம் கொல்லும்!
இனப்பற்று அவைகட் கில்லை!
இருப்பதோ அறிவில் ஐந்து!
மனப்பொருள் அவைகட் கேது?
மனிதனுக் கதுவொன் றுண்டே!
நினைத்ததும் ‘அவைகள்’ செய்யும்!
நிறுத்தபின் செய்வார் ‘மக்கள்’!
பகுத்தறிவு என்றொண் றுண்டு!
படைப்பினில் உயர்ந்தது அஃதே!
வகுத்தறி செயல்கள் உண்டு!
வாழ்க்கையின் பயனைக் கண்டு
தொகுத்தவர் மூடர் ஆமோ?
துணிந்திடு! அவரே தெய்வம்!
மிகுத்த,இவ் வறிவால் என்னாம்,
மிருகமாய்த் திரியப் போனால்?
†
No comments:
Post a Comment