Sunday, October 30, 2011

மின்வெட்டு..ஒரு போர்க்காலம்..! (06/2010)



01. அந்திமகள் மல்லிகையின் மணத்தை வீசி
                       ஆதவனைக் கீழ்சாய்த்துத் தானெ ழுந்தாள்!
      பந்துநிலா முகங்குன்றிப் பாதி யானாள்!
                      பறக்குமொரு முகில்பிடித்து முகம்ம றைத்தாள்!
     சந்தடிசெய் யாதுகொசுப் படைம றைந்து
                      சார்ந்திருந்த இலைக்கூடம் விட்டெ ழும்பும்!
     முந்துவிமா னப்படைபோல் முனைந்து தாக்கும்!
                       மூடியவீட் டுள்மனிதர் பதுங்கிக் கொள்வர்!
     அந்தவொரு வேளையினை ஆமோ தித்தே
                       அரசெங்கள் விளக்குகளை அணைத்துப் போடும்!
     வந்துதித்த மின்வெட்டால் போராட் டம்தான்!
                       வாய்த்தயிந்த நேரமொரு போர்க்கா லம்தான்!
                                   †




No comments:

Post a Comment