மின்னிருக்கும் எண்ணுகையில்! மிகுந்திருக்கும் தனிமைதனில்!
மெல்ல வந்து,
முன்னிருக்க விட்டாலோ மூவுலகும் மறைத்துவிடும்!
முளைத்து விட்டால்
பின்னிருக்கும் விளைவெண்ணிப் பேசுகின்ற அறிவினையும்
பிழைசெய் விக்கும்!
தன்னிருப்பில் களைபோலத் தான்தோன்றித் துளிர்க்கின்ற
தன்மைக் காமம்! 01
கண்பார்க்கக் கைசாடை காட்ட, நெஞ்சில்
கனலாகத் தனிமைநிலை காண, அஞ்சி
மண்பார்க்க, மற்றெவரும் உண்டோ? என்ற
மருள்பார்க்கக், கண்ணொடுகண் மீண்டும் நோக்க,
விண்பார்க்க அதிசயிக்கும் மனித ரைப்போல்விருந்தாக நிற்பவர்க்கும் விருந்தாய் நின்றே
எண்பார்க்க முடியாத கற்ப னையில்
இருவரையும் மாட்டிவிடும் காதல் தன்மை!! 02
†
No comments:
Post a Comment