மூலம்
I wrote my name upon the sand
And trusted it would stand for aye ;I wrote my name upon the sand
But soon the refluent sea
Had washed my feeble lines away.
I carved my name upon the wood,
And after years returned again;
I missed the shadow of the tree
That stretched of old upon the plain.
To solid marble next my name
I gave as a perprtual trust;
An earthquake rent it to its base
And now it lies overlaid with dust;
All these have failed; in wiser mood
I turn and ask myself what then?
If I would have my name endure
I will write it on the hearts of men;
In charecters of living light
From kindly words and actions wrought
And these beyond the reach of time
shall live immortal as my thought!.
[பைபிள் புத்தகங்களில் ஒன்றான II கொரிந்தியரில் 2-ஆம்,3-ஆம் வசனங்கள்
இவ்வாறு கூறுகின்றன : “ எங்கள் இதயங்களில் எழுதப்பட்டும், சகல மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம்(கடிதம்-மடல்) நீங்கள்தானே! ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறித்துவின் நிருபமாய் இருக்கிறீர்கள் என்று வெளியரங்கமாய் இருக்கிறது. அது மையினால் அன்று, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளில் அன்று, இருதயங்களாகிய சதையினாலான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது..”
இதை அறிவதற்கு முன்பாகவே மேற்கண்ட பாடல், பின்வரும்
மொழிபெயர்ப்பு [தழுவல்] கவிதையை எழுதுவதற்கு உந்துதலாய் இருந்தது. அதற்காக திருமதி அவர்களுக்கு எனது நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
இனி மொழிபெயர்ப்பு : 02/65 அழியாப் பெயர்..!
காலம் கடந்து வாழும் நினைவைக்
கருதித் துணிந்த கருமத்தேன்
நீலம் கரைத்த நெஞ்சம் இரைக்க
நிமிரும் படியும் கடலின் எழில்
சாலும் குறுமண் சார்ந்தென் பெயரைச்
சடிதில் எழுதிக் களிப்புறுமுன்,
ஓலம் உடைத்தாய் ஓடி நடந்தே
உழலும் அலைகள் அழித்தனவே!
ஆற்றும் வலிமை இல்லாப் பெயரும்
அழியக் களியேன், அதைவிட்டு,
மாற்றும் அதற்கு மண்மேல் உளதாம்
மரத்தில் அதனைப் பொறிப்பதெனத்
தேற்றி மனமும், தேவை முடித்துத்
திரும்பி நடந்தேன் பிறிதொருநாள்..
காற்றில் விழுந்து கரையான் அரித்துக்
காழ்ப்பம் இழந்த கதைகண்டேன்..!
ஏற்றும் சலவைக் கற்கள் இருக்க
எதற்குக் கவலை, அதில்தீட்டக்
காற்றும், கடலும், காலப் புனலும்
கரைத்தல் இயலா தெனச்செய்தேன்!போற்றும் குணமில் பூமிக் கதன்மேல
பொறாமை வரவே, பிளந்தது வாய்!
தோற்றம் இலதாய்த் தூசுக் கிடையே
தொலைபா தளமது புகுந்ததுவே!
எல்லாம் மறந்த எண்ணம் தகிக்க
எதிலே பொறிப்ப தெனவருந்த,
நல்லாம் வழியும், நம்பும் வகையும்
நமதிப் பெயரை நிறுவுதலும்
எல்லாம் இனிமேல் எய்தும், மனிதர்
இதயத் தெழுதும் பொழுதிலெனெத்
கல்லா மதியேன் காதல் மிகவே
கருத்தை வருத்திக் கண்டனனே:
தண்மை அழகால், தாழ்வில் உரையால்
தகவாம் செயலால் நடைகொண்ட
உண்மை ஒளியால் ஓங்கும் குணங்கள்
உணர்ந்து மகிழ்ந்து மனந்தேறிப்
பெண்மைக் குயர்வும், பேதம் இலவும்
பெரியோர் புகழும் நினந்து,ஆற்றி
வண்மைக்கு உருவாய் வாழின் பெயரும்
வளரும் அழியாது எனக்கண்டேன்!
இன்னும் இவைபோல் என்றும் பெயரை
எதிலும் அழியா வழிகாத்து
மன்னும் படிக்கு மற்றிவ் வுலகில்
மறையா திருக்க உதவிடுமால்,
தன்னுள் நினைத்துத் தம்முள் உணர்ந்து
தயங்காது எடுத்துச் செயல்செய்யும்!
என்றும் நிலைக்கும் என்சிந் தனைபோல்
இங்குஉம் பெயர்,இது சத்தியமே!
• • • •
No comments:
Post a Comment