Monday, November 14, 2011

குறும்பாக்கள்

              பாழும் கிணறு..!


வாழும் கிணற்றில் வந்துநீர் இறைக்க
நாளும் வருபவர் ஆயிரம் இருப்பர்..
பாழும் கிணற்றை வந்து
பார்ப்பவர் இல்லை; பார்த்து நடந்துகொள்!

                               < 0 >
             பொக்கைப் பாட்டு..

மாற்ற வேண்டும் என்ற எண்ணம்
                கல்வி கொடுக்குது..
   மாறி     விட்டால் என்ற பீதி
                மயக்கம் கொடுக்குது..
தேற்ற வந்த கைகள் போதை
                ஊற்றிக் கொடுக்குது..
    தேவை கண்டு கொண்டு வாய்க்கு
                அரிசி கொடுக்குது..
ஊற்றி வந்த வாய்கள் வாழ்த்தை
               ஓங்கி முழக்குது..
    உணர்வி ழந்த கைகள் தாமே
               ‘ஓட்டை’ அளிக்குது..
போற்றிப் பாடி ஓய்ந்த வாய்கள்
                போர்த்திப் படுக்குது..
     பொக்கைப் பாட்டுப் பாடும் என்னுள்
                பொறுமை வலிக்குது!

                       < 0 >

No comments:

Post a Comment