சாந்தி உறங்குமிடம்..!
வன்முறை பெருகி வளருது நாட்டில்!
புதிய சக்திகள்! புதுப்புது உத்திகள்!
நிதம்நிதம் தேவை நெருக்கடி நிலைமை!
இதந்தரும் செய்தியோ இன்றும்
காந்தி சமாதியில் சாந்தி உறங்குது!
< 0 >
ஒருதாரக் கணவன்..!
உன்னை விரும்பியபின்
உறக்கத்தை, மரணத்தை
எப்படித் தழுவுவேன்
இன்றும் நான்உன்
ஒருதாரக் கணவனே..!
< 0 >
ஈசல்கள் பெண்கள்..!
கலியாண மழையில் பிறந்து
வரதட்சணைக்
கனலில் மடியும்
மலிவான ஈசல்கள்..!
< 0 >
(10-11-11) ஏனோ..?
உயிருள் ளவனாய் இருக்கும் போதும்
உணர்வின் றிருக்கிறேன்! -ஏதோ
உலவித் திரிகின்றேன்!
தயிரின் உள்ளே தங்கிய நெய்யாய்த்
தனித்து நிற்கிறேன்! - ஏனோ
தவித்தே வாழ்கிறேன்!
வயிற்றின் உள்ளே உணவாய் வந்தாய்
வளத்தைப் பெறலில்லேன்! - இன்னும்
வாய்திறந் திருக்கின்றேன்!
பயிரிட் டவனே ஏனோ நீயும்
பார்த்தே நிற்கிறாய்? -தண்ணீர்
பாய்ச்சா திருக்கிறாய்!
< 0 >
( 08/’2009) தமிழர் இரத்தம்..
நீலத் திரைக்கடல் ஓரம் நின்றே
நித்தம் தவம்செய் குமரிப் பெண்ணே!
காலைத் தழுவுதே தமிழர் இரத்தம்
கண்கள் திறக்க மறுப்ப தும்,ஏன்?
< 0 >
வன்முறை பெருகி வளருது நாட்டில்!
புதிய சக்திகள்! புதுப்புது உத்திகள்!
நிதம்நிதம் தேவை நெருக்கடி நிலைமை!
இதந்தரும் செய்தியோ இன்றும்
காந்தி சமாதியில் சாந்தி உறங்குது!
< 0 >
ஒருதாரக் கணவன்..!
உன்னை விரும்பியபின்
உறக்கத்தை, மரணத்தை
எப்படித் தழுவுவேன்
இன்றும் நான்உன்
ஒருதாரக் கணவனே..!
< 0 >
ஈசல்கள் பெண்கள்..!
கலியாண மழையில் பிறந்து
வரதட்சணைக்
கனலில் மடியும்
மலிவான ஈசல்கள்..!
< 0 >
(10-11-11) ஏனோ..?
உயிருள் ளவனாய் இருக்கும் போதும்
உணர்வின் றிருக்கிறேன்! -ஏதோ
உலவித் திரிகின்றேன்!
தயிரின் உள்ளே தங்கிய நெய்யாய்த்
தனித்து நிற்கிறேன்! - ஏனோ
தவித்தே வாழ்கிறேன்!
வயிற்றின் உள்ளே உணவாய் வந்தாய்
வளத்தைப் பெறலில்லேன்! - இன்னும்
வாய்திறந் திருக்கின்றேன்!
பயிரிட் டவனே ஏனோ நீயும்
பார்த்தே நிற்கிறாய்? -தண்ணீர்
பாய்ச்சா திருக்கிறாய்!
< 0 >
( 08/’2009) தமிழர் இரத்தம்..
நீலத் திரைக்கடல் ஓரம் நின்றே
நித்தம் தவம்செய் குமரிப் பெண்ணே!
காலைத் தழுவுதே தமிழர் இரத்தம்
கண்கள் திறக்க மறுப்ப தும்,ஏன்?
< 0 >
No comments:
Post a Comment