Monday, November 14, 2011

எங்கும் போக வில்லை- மாமா



எங்கே போனது
அந்த விழிப்பு?
உருட்டி விழித்த அந்த விழிகள்
ஒளிந்து கொண்டதும் எங்கே..?

எங்கெ போனது
அந்தச் சிரிப்பு?
தீக்குச்சியைக் கிழித்தது போலத் தெறித்ததே!
இன்று முறிந்ததும் எங்கே?

எங்கே போனது
அந்தக் கலகலப்பு?
உருட்டிவிட்ட செம்பின் ஒலிகள்
உறங்குவதும் உண்மையோ? எங்கே?

எங்கே போனது
அந்தக் கோபம்?
’செர்ரிப் பழம்’போல் மூக்கில் நின்ற
சிகப்பு விளக்கும் அணைந்ததோ?
மிரட்டிய கண்களை
விரட்டிய குறும்பு
திரட்டிய சிரிப்பை
மூடிய முகத்துள்
தேடிடக் கிடைக்குமோ?
தேடலும் எங்ஙனோ?



எங்கும் போக வில்லை- மாமா
என்னுள்ளே தானே என்றும் இருக்கும்!
என்னுள்ளே தானே என்றும் இருக்கும்!


                                 < 0 >

No comments:

Post a Comment