Monday, November 14, 2011

வானில் ஒரு நாடகம்..!



பரணில் ஒளிக்கப்பட்டப்
பதுக்கல்காரனின்
பணமூட்டையைப் போல,
ஒளிந்து ஒளிந்து நகரும்
திருடனைப்போல
அசைந்த்து மேகம்..


குனிந்து ஒளிந்திருக்கும்
காவலர்போல
ஒரு குன்று..

கல்லென்று அமரக்
‘கப்’பென்று பிடிபட்ட்த்
திருடனைப் போல
சிக்கியது மேகம்..!


கைபொருளை மீட்கும்
காவலரின் அடியும்
கதறும் திருடனின்
அலரலுமாக
மின்னலும் இடியும்..!


அழுது புலம்பும்
பொருளிழந்தவர் போல
அலைகடல்..

அறம் வாழ்ந்ததா!
மழை வீழ்ந்ததா?
இன்னும்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்..


           < 0 >

No comments:

Post a Comment