Monday, November 14, 2011

இன்றைய பாமரன்..!


வறுமையெனும் கோட்டிற்குக் கீழே வாழ்வான்!
         வாழ்க்கையெனும் மேட்டிற்குப் படியாய் நிற்பான்!
பொறுமையெனும் கோட்டிற்குக் கீழே ஊர்வான்!
        போலிகளை விற்பதற்குச் சந்தை யாவான்!
உரிமையெனும் கம்பெடுத்தார் கையில் ஆடி,
        உண்பதற்கே அவர்விரித்த இலையாய் வீழ்வான்!

சாதியெனும் கோலத்தில் புள்ளி யாவான்!
        சாய்க்கடையில் நெளிகின்ற புழுவாய்ப் போனான்!
வாதியெனும் வாழ்க்கையின்முன் தோற்று நிற்பான்!
       வாக்குடையோர் பட்டியலில் வாழ்ந்தி றந்தான்!
சோதியெனும் தேசத்தின் சொத்தாய் நிற்பான்!
       சூழ்நிலையின் கைதியிவன் மவுனி யாவான்!


                                               < 0 >

No comments:

Post a Comment