Thursday, December 6, 2012

மனம்பேசுதே:(01)



கண்ணில்லை 
என்பதனால் 
கைக்குவாய் 
தெரியாதா? 
கல்வியில்லை 
என்பதனால் 
கருத்துக்கு நீதி 
புரியாதா? 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

தினமும் 
தேய்க்கிறேன் 
பற்களை மட்டுமா..? 
ஆயுளையும்தான்...! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

அடுப்பு மூட்டியே 
சமைக்க நினைக்கிறேன்! 
அடிக்கும் கொள்ளைகள் 
கேட்டுத் துடிக்கிறேன்! 
அடுப்பு மூட்டியே 
சமைக்க நினைக்கிறேன்! 
அவர்களை நினைத்தே 
என்னுள் வேகிறேன்! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment