Thursday, December 6, 2012

மனம் பேசுதே!: (02)



என்னைக் கவிதை எழுத விடுங்கள் ! 
ஏழ்மையைக் கொஞ்சம் மறக்க விடுங்கள்! 
முன்னைப் பெருமை பேச விடுங்கள்! 
முதியோர் துயரைப் போக்க விடுங்கள் ! 
தன்னைப் பெரிதாய் நினைக்க விடுங்கள்! 
தனிமைத் துயரில் நனைய விடுங்கள்! 
சின்னக் குழந்தை என்று விடுங்கள்! 
சிறுமை மறந்து சிரிக்க விடுங்கள் ! 

!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
கழனி காடெலாம் 
மனையாய் விற்கிறேன்! 
காக்கை குருவியைத் 
தேடி நிற்கிறேன்! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

இமைகளை மூடியே 
தூங்க மறுக்கிறேன்! 
இடுப்புத் துணியை நான் 
இழக்க வெறுக்கிறேன்! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

இந்தியாவுக்கும் 
இலங்கைக்கும் 
இடையில் 
நீலப் புடவையில் 
கச்சை கட்டிய தனங்கள் 
மல்லாக்கக் கிடப்பதுபோல் 
கிடந்தது 
கச்சத்தீவு..! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment