Thursday, December 6, 2012

குறுகுறுப் பாக்கள்:(14)

கொழுந்தாய் 
இலையாய்ப் 
பூவாய்ப் பிஞ்சாய்க் 
காயாய்க் 
கனியாய் 
விதையாய் 
வேராய் 
ஒவ்வொன்றாக 
அழித்தோம் உங்களை.. 
அதனால்தானோ 
நியாயத் தீர்ப்பாம் 
கடைசி நாட்களில் 
காலம் எங்களை 
உனது கைகளுக்குள் 
அடைக்க்கலாமாக்கி 
அனுப்பி வைக்கிறது...! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 


ஆனை முகனின் அருளுண்டு; 
...
ஆறு முகனின் துணையுண்டு; 
மோனைத் தமிழும் எனக்குண்டு! 
...
முன்னே நிற்க நீயுண்டு; 
வானை மறைக்கும் காருண்டு, 
...
வந்து கொட்டும் மழையுண்டு! 
பானைச் சோறு நிதமுண்டு ! 
...
படிக்கக் கேட்பாய் செவிகொண்டு! 
[
இது கவின் சாரலன் அவர்களின் பானைச் சோறு கவிதைக்குக் கருத்தாக எழுதியது..] 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


No comments:

Post a Comment