Thursday, December 6, 2012

குறுகுறுப் பாக்கள்-06

எண்ண மலைவிட்டு 
.....
இறங்கும் அருவிகள்! 
எட்டுத் திசையிலும் 
.....
பறக்கும் குருவிகள்! 
வண்ணத் தோகையில் 
.....
ஆடிடும் மயில்கள்! 
வாழ்க்கைப் பண்களைப் 
.....
பாடிடும் குயில்கள்! 
கண்ணில் மிதக்கும் 
.....
கனவின் நிறங்கள்! 
காலம் கடந்தும் 
.....
வாழும் நினைவுகள்!

No comments:

Post a Comment