Thursday, December 6, 2012

தலைவியின் துயரம் [தோழியிடம் தலைவி ஆற்றாது கூறுவது]


மேலோர் உரைசெயும் மேன்மையனை, மானிடருள் 
நூலோர் நுவல்பொருளை, நித்தியத்தைக் -காலாறச்
சென்று துதிசெய்வார் சீரெய்த, எய்தாரே 
ஒன்றைத் துதிசெய்யா தோர்! 

வருந்தி உழன்றேன்முன் வாரானாய்த் தான்அன்று 
இருந்த மகனாம்கோல்! ஈதென்று -அரும்பவிழும் 
கூந்தல் மடமகளும் கேட்டிடுவாள்! நான்கண்டு 
நீந்தும் திறன்,அறியாப் போது ! 

வாரும் உடனென்ன வாராராய்ப் போ,எனவே 
கூறி இருந்தவரோ கூறிடுவாய்! -நாரியருள் 
மேன்மை பலகொண்ட மெல்லியலாய்! என்,அன்பர்
பான்மை தனைநீயும் பார்த்து! 

ஆசை விழிவழியே அன்பின் பொருள்தன்னை 
ஊசல் மனத்தோடும் ஒண் தொடியே! -நேசரவர் 
காணக் களிகொண்டு கட்டுரைத்தேன்! காணார்போல் 
மாணக் கிடந்தார்கொல்! மெய்! 

உந்தும் மனத்தசை ஓரானோ? ஊர்அறியச் 
சொந்தம் எனக்கையும் சேரானோ? -சந்ததமும் 
உள்ளத்து இருந்தே ஒறுப்பதேன்? பல்பொருளைக் 
கொள்ளத் தலஞ்சென்ற கோ! 

கோன்சொலச் சென்ற கொற்றவர் முல்லையில் 
தான்வரு வேன்,எனல் தப்பாச்சே! -வான்வரு 
தண்மதி போன்ற,என் தையலே! என்னுளம் 
கண்ணுறங் காதது காண்!.. 
-
-
[1963-இல் எழுதியது-உரை கேட்க வேண்டாம்]

No comments:

Post a Comment