நீருண்ட மேகம்போல் நீண்ட கூந்தல்!
நிறையகத்துக் கயலேபோல் மையுண் ண்கள்!
காருண்ட நிலவேபோல் காணும் நெற்றி!
கதிரில்லாப் பகலோன்போற் காணும் பொட்டு!
சீருண்ட கடற்சிப்பி போலும் செவ்வாய்!
சிரித்தாலோ முத்தாக வெட்டும் பற்கள்!
தேரொன்று வந்தாற்போல் தோன்றும் நங்கை
தெவிட்டாத அமுதாமே தெரியின், அம்மா!
பூந்தாதின் நறுமணமோ! பொன்னோ! தேனோ!
பூத்தமலர் இவள்முகமோ! புதுமை தானோ!
மாந்தாத கனியாமோ மங்கை கன்னம்!
மயலுற்றேன் தருவாளோ இலையோ? இன்னும்
ஏந்தானோ இன்மீதே இந்தக் கோபம்?
ஏங்குவதும் அறிகிலளோ, இரவில் நானும்?
நீந்தாத கடல்தனோ நங்கை காதல்?
நீந்துமுனர் மடிவேனோ? நெறியும் ஈதோ?
†
No comments:
Post a Comment