ஒத்தார் இலவயத்திற்கு ஓடினார் மற்றையோர்
செத்தார்,வாக் கற்றோருள் சேர்ந்து! 1
புத்தேள் உலகின் பொருட்கள் இலவயமாய்
இத்தரைமேற் கொள்ளல் இனிது! 2
கடல்நீர் எடுத்துக் கரவாது மாரி
கொடல்போலும் கொள்கை அரசு! 3
ஊழலால் பெற்றபொருள் ஊருள் இறைப்பதுவே
வேளாண்மை என்று விளக்கு! 4.
ஒப்பி இலவயங்கள் உன்னதாய்க் கொள்ளுவையேல்
இப்பிறப்பில் ஊழலிற வாது! 5.
ஊருணி நீர்வளைத்தே ஊருக்குள் விற்பவர்க்கே
பேரறி வாளனெனும் பேர்! 6
பயன்மரம் குத்தகைக்கு விட்டற்றால் வாக்குச்
செயநீங்கள் வாங்கும் பணம்! 7
மருந்தாம் அரசுமரம் ஊழலால் வெட்டி
அருந்தார் அறிவுடை யார்! 8
நஞ்சிடுவார் ஊருணியில் நல்லவரும் ஆவாரோ?
அஞ்சிடுவீர் ஊழல் அதை! 9
உலக நடையறிதல் ஒப்புரவாம்; சூழும்
கலகங்கள் விட்டறிதல் காண்! 10
(†)
No comments:
Post a Comment