மனைமலர் குடும்பத் தோடும்
மகிழ்வுடன் படிக்கக் கூடும்!
நினைவுகள் சிறந்த தாகும்!
நிம்மதி எழுச்சி சேரும்!
கனவுகள் உயர்ந்து காணக்
கைவரும் செயல்கள் யாவும்!
தினம்,இதில் வருப வற்றைத்
தியானமே செய்யத் தோன்றும்!
‘சொல்’லிலே விசுவா சம்,தான்
சொற்பமும் இல்லார் தீண்டார்!
கல்லெனும் இதயம் மாறக்
கருதிடார் கையில் ஏந்தார்!
நல்லதோர் போராட் டத்தை
நாடிடார் திறக்க மாட்டார்!
இல்லறம் சிறக்க எண்ணும்
எவருமே இதற்கு மாறே!
ஏங்குவார் ஏக்கம் தீர
எடுத்துநீர் சொல்லல் ஆகும்,
தீங்கினை நோக்கிச் செல்வார்
திரும்பிடச் செய்யக் கூடும்;
நெருங்கிய பேர்க்கும் காட்டித்
தாங்கிட அழைப்பேன்! உம்முள்
தயங்கிடாது உதவ வாரீர்!
பிறந்தநாள் காணு வோர்க்கும்
பெருமையால், அன்பால் வானில்
பறந்திடும் மணமக் கட்கும்,
பழகியோர் மணநாள் கண்டு
சிறந்திடும் நன்னாள் அன்றும்
செய்திடும் சிறப்பி னோடும்
மறந்திடாது இதற்குச் சந்தா
வழங்கியே கொடுக்க வாரீர்!
†
No comments:
Post a Comment