Thursday, October 20, 2011

இதயமே கேட்பாய் இது..! (அக்டோபர்..64)




மாவின் இளந்தளிரே! மாலைப் பொழுதலரும்
பூவின் புதுவுருவே! பூமகளே! நாவலதன்
தீங்கனியே! நீசென்ற தேதிமுதல் என்னுயிரும்
நீங்கிவரும் காணாய் நிதம்!.

முல்லை நகைமலர மொய்க்கின்ற வண்டாக
எல்லைக் குழையோ டிருவிழியும் புல்லவரும்
தோற்றம் இலையென்கத் துன்பவினைக்கு என்றனுயிர்
ஆற்றல் அறியா(து) அறி!.

எண்ணம் எனும்வானில், எந்தன் உயிர்வெளியில்
வண்ண நிலவாக வந்தவளே! கண்முன்
உதயமா காதே இளிப்பையேல், வாழேன்
இதயமே கேட்பாய் இது!

                       

No comments:

Post a Comment